30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கபட்ட சமோசா

சுகாதார துறை அதிகாரிகளால் உணவகம் பூட்டப்பட்டது. சவுதி அரேபியாவில் அசுத்தமான உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல.
30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கபட்ட சமோசா
Published on

ஜெட்டா

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளின் ரகசிய தகவலையடுத்து அவர்கள் உணவகத்திற்கு செல்கின்றனர். அதில், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட பிற உணவுகள் உள்ளன.

மதிய உணவு உட்பட மற்ற உணவுகள் அதே குளியலறையில் தயாரிக்கப்பட்டன. மேலும், உணவகத்தில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டி பயன்படுத்தப்பட்டு உள்ளன . அவைகளில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகிவிட்டனர. உணவகத்தில் பூச்சிகளும் எலிகளும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றன. 30 வயதான உணவக ஊழியர்களிடம் சுகாதார அட்டை இல்லை.

இதையடுத்து உணவகம் பூட்டப்பட்டது. சவுதி அரேபியாவில் அசுத்தமான உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. ஜனவரி மாதம் ஜெட்டாவில் உள்ள ஷவர்மா உணவகத்தில் எலி ஒன்று சுற்றித் திரிந்தது.

இந்த உணவகத்தில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் ஆத்திரமடைந்தனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் உணவகத்தை மூடினார்கள். இதற்கு பதிலளித்த சவுதி அதிகாரிகள், பல்வேறு இடங்களில் 2,833 ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தனர். அதில் 43 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com