சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடர் - ரூ.75 கோடி பரிசை தட்டிச் சென்ற இளவரசரின் குதிரை

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது.
சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடர் - ரூ.75 கோடி பரிசை தட்டிச் சென்ற இளவரசரின் குதிரை
Published on

ரியாத்,

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது. ஆயிரத்து 800 மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 50 வினாடிகளில் இளவரசரின் எம்ப்ளம் ரோட் (Emblem Road,) குதிரை கடந்தது.

இதனையடுத்து, குதிரையின் உரிமையாளரும் இளவரசருமான சவுத் பின் சல்மானுக்கு, கோப்பையுடன் 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com