* ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் முன்னாள் மேயர் முகமது அலி நஜாபி. இவர் கடந்த மே மாதம் தனது 2-வது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கில் முகமது அலி நஜாபிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.