இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம்

இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்றார்.

ஆனால், அங்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர், இந்திய தூதரை காரை விட்டு இறங்க விடாமல் தடுத்தனர். அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். இதையடுத்து, இந்திய தூதர் திரும்பி சென்றார்.

பின்னர், 3 பேரும் குருத்வாராவுக்குள் சென்று வழிபாட்டு பணிகளை சீர்குலைத்தனர்.

இதுதொடர்பாக அந்த குருத்வாரா நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது குருத்வாரா, அனைத்து மதத்தினரையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com