ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி லெபனானில் சுட்டுக்கொலை

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி லெபனானில் சுட்டுக்கொலை
Published on

பெய்ரூட்,

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். இவர் கடந்த 1985-ம் ஆண்டு 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கி சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாதி, தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது ஆறு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே ஷேக் ஹமாதி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com