

மஜார் இ ஷெரீப்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தில் கடத்தல்காரர்கள் சிலர் 2 பேரை சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க பணய தொகை கேட்டு மிரட்டலும் விடுத்தனர். அவர்களை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர்.
கடத்தல் கும்பலை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கடத்தல்காரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், கடத்தல் கும்பல் சிறை பிடித்து வைத்திருந்த 2 பேரும் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.