கிரீஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கிரீஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு
Published on

கிரீட்,

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதனால், மக்களில் பலர் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பியோடினர். பழைய கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. இதுதவிர, 9 பேர் காயமடைந்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com