செஷெல்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி வெற்றி


செஷெல்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி வெற்றி
x

எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

விக்டோரியா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷெல்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.

எனவே இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேவல் ராம்கலவனும், பிரதான எதிர்க்கட்சியான ஹெர்மினி ஐக்கிய செஷெல்ஸ் சார்பில் பேட்ரிக் ஹெர்மினியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story