ஷாங்காய் மாநகரில் ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - சீன அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் மாநகரில் ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - சீன அரசு அதிரடி உத்தரவு!
Published on

பீஜிங்,

சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீரே கொரோனாகொள்கையை சீன அரசு கடைபிடித்து வருவதால், கெரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பேன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கெரோனா பரவல் தற்பேது கேரத் தாண்டவமாடி வருகிறது.

இந்நிலையில், பொருளாதார மையம் ஆக திகழக்கூடிய ஷாங்காய் நகரத்தில் கெரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தற்போது அமலில் உள்ள ஊரடங்கை வரும் 26 ஆம் தேதி வரை நீட்டித்து சீன அரசு உத்தரவிட்டு உள்ளது.

கெரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில், பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com