

வாஷிங்டன்,
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசாரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துரத்திச் சென்று அதே இடத்தில் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.