சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்
Published on

பெய்ஜிங்,

சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் வேறு சிலரும் லேசான காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வெடிவிபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com