சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
Published on

ஜூபா,

சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் பல தெற்கு சூடான் மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள சூறையாடப்பட்டன. இதன்பிறகு கடந்த 17ம் தேதியன்று தெற்கு சூடானில் ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.

இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தி தேசிய தொடர்பு ஆணையம் (NCA) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி, 90 நாட்கள் வரை நீட்டிக்கக்கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com