

கொழும்பு,
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவையை தொடங்க இலங்கை அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல்சிரிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்தில் இந்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதால் படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.