மனித உரிமை மீறல் வழக்கில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மனித உரிமை மீறல் வழக்கில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்ப இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு யாழ்ப்பாணம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அப்போது கோர்ட்டில் ஆஜராகாமல் அவர் தப்பினார். பின்னர் நாட்டின் அதிபர் ஆனதால் அரசியல் சாசன விலக்கு பெற்றவர் என்ற முறையில் இந்த சம்மன் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தற்போது இந்த வழக்கு வருகிற டிசம்பர் 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியதால், அவருடைய அரசியல் சாசன விலக்கு ரத்தாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com