இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடுகிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடுகிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கிவைத்தார். இதற்கு ரனில் விக்ரமசிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்றம் 7-ந் தேதி கூடும் என தகவல் வெளியானது. எனினும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் நாடாளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com