அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: ஈரான் அறிவிப்பு

அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்கும் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை இந்த மண்டலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
Published on

அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும், தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி இதுகுறித்து கூறுகையில், “அமெரிக்கா ஈரானை அச்சுறுத்துவதையும் தாக்குவதையும் நிறுத்தினால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய தடை செய்யப்பட்ட கடல் மண்டலத்தை வரும் நாட்களில் அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் ரெசாயி கூறினார். அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்கும் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை இந்த மண்டலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மண்டலத்துக்குள் ஈரானுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் அந்தக் கப்பல்களின் காப்பீடு மற்றும் எதிர்கால ஹார்முஸ் ஜலசந்தி பயணங்களும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் மற்றும் ஓமன் கடற்பகுதிகளை உள்ளடக்கிய புதிய சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்துக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ரெசாயி தெரிவித்தார்.

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்கால நிலை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com