நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 31 பேர் பலி

நைஜீரியாவில் தற்கொலைப்படைகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 31 பேர் பலி
Published on

கானோ,

நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளுக்கும் நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் போகோஹராம் பயங்கரவாதிகள் 2 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பாவி மக்கள் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com