பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி; 30 பேர் காயம்

பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி; 30 பேர் காயம்
Published on

பஞ்சாப்,

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குவாடர் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் சீனர்கள் பயணம் செய்த வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று சீனர் ஒருவர் உள்பட 30 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்பு படையினர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com