பாகிஸ்தான் பயணிகள் ரெயில்கள் மோதி விபத்து பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

பாகிஸ்தானில் 2 விரைவு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.
Image courtesy : dawn.com
Image courtesy : dawn.com
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம் அருகே இந்த ரெயில் 03.43 க்கு ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி உள்ளது.

இந்த விபத்தில் மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து பெட்டிகள் கவிழ்ந்தன, அதே நேரத்தில் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன, மூன்று கவிழ்ந்தன, இதில் 31 பேர் பலியானார்கள் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்.அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவின,ர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்கி உயர் போலீஸ் அதிகாரி உமர் துஃபைல் க்குறும் போது 40 உடல்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. ர்யிலின் இடிபாடுகளில் 15 முதல் 20 பயணிகள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், உதவிக்காக அழுகிறவர்களை மீட்க கனரக இயந்திரங்களை ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இறந்தவர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த 25 பேர் ஆபாத்தான நிலையில் உள்ளனர்.

கராச்சி, சுக்கூர், பைசலாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் பயணிகளுக்காக ஹெல்ப்லைன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தை ரெயில்வே அமைச்சர் அசாம் கான் சுவாதி பார்வையிட்டார்.

இந்த விபத்தால் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை முடங்கி உள்ளது. பாகிஸ்தான் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக ஒரு தகவல் மைஅயம் அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மதியம் 2 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது;-

இன்று அதிகாலை கோட்கியில் நடந்த பயங்கர ரெயில் விபத்தில் 30 பயணிகள் உயர் இழந்தது குறித்து அதிர்ச்சியடைந்தேன். ரெயில்வே அமைச்சரை சம்பவ இடத்திற்கு செல்லவும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதிப்படுத்தவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளேன். ரெயில்வே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடடும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com