இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மார்ச் 4 வரை சிறையில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மார்ச் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மார்ச் 4 வரை சிறையில் அடைக்க உத்தரவு
Published on

கொழும்பு,

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் இலங்கை மயலிட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் அவர்களின் படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com