ஈரான் நாட்டின் துறைமுக நகரத்தில் பயங்கர தீ விபத்து

ஈரான் நாட்டின் துறைமுக நகரம், புஷெகர். இங்கு ஈரான் கடற்படை தளம் உள்ளது. மேலும் ஒரு அணுமின் நிலையமும் இருக்கிறது.
ஈரான் நாட்டின் துறைமுக நகரத்தில் பயங்கர தீ விபத்து
Published on

இந்த நகரத்தின் மோட்டஹரி சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயைப் போராடி அணைத்தனர்.இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த தீ விபத்தின் பின்னணி உடனடியாக தெரியவில்லை. இது குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com