சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்; 3 வீரர்கள் பலி

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்; 3 வீரர்கள் பலி
Published on

டமாஸ்கஸ்,

சிரியாவில் டெய்ர் எஜ்-ஜோர் மற்றும் பல்மைரா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அட்-டான்ப் பகுதியில் இருந்து வந்த பயங்கரவாத குழு ஒன்று பேருந்தீன் மீது தாக்குதல் நடத்தியது. அல்-ஷோலா பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30ந்தேதி, இதே பகுதியில் பேருந்து ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com