மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாயினர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
Published on


* ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தின் தலைநகர் பாராவில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* பக்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலிபா அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து, இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்தும், ஈரான் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

* மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் லேக் சாத் பிராந்தியத்தில் உள்ள ராணுவ சாவடி மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

* ரஷியா-சீனா இடையிலான 24-வது சந்திப்பு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக சீன பிரதமர் லி கெகியாங், தனது மனைவி செங் ஹாங் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருடன் ரஷியா புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com