நெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்

ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்
Published on

ஜிம்பாப்வே,

ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிறைச்சாலைகளில் இருந்து 5-ல் ஒரு கைதிக்கு பொதுமன்னிப்பு மூலம் விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 4 ஆயிரத்து 270 கைதிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர். விரைவிலேயே அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதன்மூலம் விடுதலையான கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

விடுதலையான கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து உற்சாகமாக நடனமாடியபடி வெளிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com