இலங்கையில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது

இலங்கையில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கொழும்பு,

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இடம்பெற்ற பிம்ஸ்டெக் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பாடுபட்டு வருகிறது.

பிம்ஸ்டெக் 5-வது உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இலங்கையில் இன்று முதல் 30-ந் தேதிவரை நடக்கிறது. நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் மாநாடு நடக்கிறது.

இந்தியா, வங்காளதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்கிறார்கள். மியான்மர் வெளியுறவு மந்திரி காணொலி காட்சியில் பங்கேற்று பேசுகிறார்.

30-ந் தேதி, அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடக்கும் அமர்வில், இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். அமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com