பிரேசிலுக்கு வந்து சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் இதயம்...

போர்ச்சுகீசில் இருந்து கொண்டு வரப்பட்ட டாம் பெட்ரோவின் இதயத்தை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.
பிரேசிலுக்கு வந்து சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் இதயம்...
Published on

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில், சுமார் 300 ஆண்டுகளாக போர்ச்சுகீசியர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து 1822 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி, போர்ச்சுகீசிய மன்னரான டாம் பெட்ரோ என்பவர், பிரேசிலை சுதந்திர நாடாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து 1834 ஆம் ஆண்டு தனது 35-வது வயதில் டாம் பெட்ரோ காலமானார். அன்று முதல் அவரது இதயம் போர்ச்சுகல் நகரமான போர்ட்டோவில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க கலசத்தில் ஃபார்மல்டிஹைட் வேதிப்பொருளை பயன்படுத்தி டாம் பெட்ரோவின் இதயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் சமயத்தில் இந்த இதயம் 3 வாரங்களுக்கு பிரேசில் அரசிடம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு டாம் பெட்ரோவின் இதயம் தற்போது பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, முழு ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com