ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெர்லின்,

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 10-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 09 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,71,200 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஜெர்மனியில் சுமார் 2,59,377 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக ஏப்ரல் 18-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com