சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியது

சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அங்கு சினோபார்ம் நிறுவனத்தின் 2 தடுப்பூசிகள், சினோவேக், கான்சினோ என 4 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாக சுவாச நோய்க்கான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஜாங் நன்ஷன் சமீபத்தில் கூறியிருந்தார்.

அந்த வகையில் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 63 கோடியே 91 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.

இப்படி மொத்த எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியிருந்தாலும், எவ்வளவு பேர் 2 டோஸ்களும் போட்டுள்ளனர்?, எத்தனை பேர் முதல் டோஸ் மட்டும் போட்டிருகின்றனர்? என்ற விவரத்தை சீன அரசு வெளியிடவில்லை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com