

மாஸ்கோ,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி என்ற சிறப்பு, ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு உண்டு. இந்த தடுப்பூசி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே உருவாக்கப்பட்டு விட்டது.
இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. இந்த தடுப்பூசி பற்றி கமலேயா ஆராய்ச்சி மைய ஆய்வுக்கூட தலைவர் விளாடிமிர் குஷ்சின் கூறியதாவது:-
டெல்டா வைரசை ஸ்புட்னிக் தடுப்பூசி வெளிப்படையாக சமாளிக்கிறது. இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ்களின் மிகவும் ஆபத்தான நிகழ்வுகளுக்கு எதிராக 100 சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.