கொரோனா தொற்றில் இருந்து சிரிய அதிபர் குணமடைந்தார்

கொரோனா தொற்றில் இருந்து சிரியா நாட்டின் அதிபரும் அவரது மனைவியும் முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து சிரிய அதிபர் குணமடைந்தார்
Published on

டமாஸ்கஸ்,

சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத்(வயது 55) மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகிய இருவருக்கும் கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தொற்று ஏற்பட்டு 3 வாரங்களுக்கு பின்னர், தற்போது சிரிய அதிபரும் அவரது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com