சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
Published on

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றியது. இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று பரவி இருக்கிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. ஏற்கனவே இந்த தொற்று பாதிப்புக்கு ஆளான குழந்தைகள், 6 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச்சுக்குள் தொடங்கி விடும் என தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com