ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது.
ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி
Published on

ஸ்டாக்ஹோம்,

ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது. பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com