

ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ளாவிட்டால் அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈரான் அணு ஆயுதம் வைத்து இருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், அல்லது அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுவதை சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்புகிறார்.
என்னால் எவ்விதத்திலாவது உதவ முடிந்தால், நான் உதவ விரும்புகிறேன் என்று கூறினார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை சீனாவும் விரும்பவில்லை” என்றார்.