இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 7.74 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20,73,511 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 215 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அங்கிருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் வரும் 31 ஆம் தேதி வரை இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் என்று கூறப்படுவதால், உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com