இங்கிலாந்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் புதிதாக 48,553 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 48,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,81,098 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 80 ஆயிரத்து 030 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 7,72,475 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com