இங்கிலாந்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 84,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,05,410 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 075 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 36,55,733 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இங்கு கண்டறியப்படும் கொரோனா பாதிப்பு அடைந்தோரில் 93.4% பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 5.6% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com