இந்தியாவில் 18 ஆயிரம் ரோஹிங்யாக்கள் ஐ.நா. அதிகாரி தகவல்

மியான்மர் நாட்டில் கணிசமாக வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், சக குடிமக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தியாவில் 18 ஆயிரம் ரோஹிங்யாக்கள் ஐ.நா. அதிகாரி தகவல்
Published on

ஜெனிவா,

மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய 7 ரோஹிங்யாக்கள் கோர்ட்டு உத்தரவுப்படி சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 18 ஆயிரம் ரோஹிங்யாக்கள் வசித்து வருவதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெஜ் மகசிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 7 பேரை நாடு கடத்தியது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம், எந்த சூழ்நிலையில் அந்த 7 பேரும் நாடு கடத்தப்பட்டனர் என்று விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com