

காபூல்,
உலக நாடுகளில் குழந்தைகள் தினமானது வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினி, நோயால் வாடும் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச குழந்தைகள் தின கொண்டாட்டங்களை புறக்கணித்ததாக ஆப்கானின் யுனிசெப் அமைப்பு தெரிவித்தது.