பிரான்ஸ்: ஈபில் டவரில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை அறிமுகம்

யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்துள்ளது.
பிரான்ஸ்: ஈபில் டவரில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை அறிமுகம்
Published on

பாரிஸ்,

யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யு.பி.ஐ. பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.

இந்தியாவின் யு.பி.ஐ. சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.

இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யு.பி.ஐ. பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யு.பி.ஐ. வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யு.பி.ஐ. பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com