அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 787 பேர் பலி

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியன.
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 787 பேர் பலி
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியன. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 787 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஈரானின் 153 நகரங்களில் 504 இலக்குகளை குறிவைத்து 1 ஆயிரத்து 39 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com