ஈரான் விவகாரம்: 48 மணி நேரங்களில் தெரியும்: டொனால்டு டிரம்ப்

ஈரான் - அமெரிக்கா போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன.
டொனால்டு டிரம்ப்
Published on

அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்னும் 48 மணி நேரத்தில் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "ஈரான் தொடர்பாக நாள் முழுவதும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேறி வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்" என்று கூறினார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் டிரம்ப் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் தெரிவித்தார். உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான இந்த பேச்சுவார்த்தையின் முடிவு சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com