ஜோ பைடனுக்கு உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை: வெள்ளை மாளிகை தகவல்

உக்ரைனுக்கு செல்வதற்கான எந்த திட்டமும் ஜோ பிடனுக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு செல்வதற்கான எந்த திட்டமும் ஜோ பைடனுக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், பைடனின் இந்த பயணம் மிகவும் சிக்கலான பாதுகாப்பு சவாலை முன்வைக்கும் என்று கூறிய அவர், பிடன் நிர்வாகம் அதற்கு பதிலாக ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை அனுப்ப விரும்புவதாகவும் கூறினார்.

"யாராவது சென்றால்... யார், எப்போது செல்வார்கள் என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரை, எப்போது, எப்பொழுது என்று அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் தெரிவுபடுத்தமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு நேர்காணலில், ஜெலென்ஸ்கி கூறும்போது, பைடன் வருவார் என்று நான் நினைக்கிறேன், "ஆனால் அது நிச்சயமாக அவருடைய முடிவு மற்றும் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது" என்றார். "அவர் அமெரிக்காவின் தலைவர். அதனால் அவர் இங்கு வந்து பார்க்க வேண்டும்." என்று கூறினார்.

"இரண்டு அதிபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சந்திப்பு, உக்ரைனுக்கான புதிய பொருட்கள், அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் இந்த மோதலின் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களுக்கு வழி வகுக்கும்," என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com