கோவாக்சின் சப்ளையை தற்காலிகமாக நிறுத்திய உலக சுகாதார அமைப்பு!

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐ.நாவுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையை ஐ.நாவுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் காரணம் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் 22ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வுக்குப்பின் பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க இருப்பதாகத் தெரிவித்ததது.

இந்த அறிவிப்புக்கு அடுத்ததாக, உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐ.நாவுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com