2 குழந்தைகள் பெற்ற பின் தனது காதலியை சிறையில் திருமணம் செய்யும் ஜூலியன் அசாஞ்சே..!!

பெல்மார்ஷ் சிறைச்சாலையில் ஜூலியன் அசாஞ்சே-ஸ்டெல்லா மோரிஸ் திருமணம் இன்று நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொள்கிறார்.

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.

50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ், 37 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன்னை விட 13 வயது இளம் பெண்ணை ஜூலியன் அசாஞ்சே இன்று திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இவர்களது திருமணம் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் நடைபெற இருக்கிறது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com