உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.38 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54.89 கோடியாக உயர்ந்து உள்ளது.
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.38 கோடி ஆக உயர்வு
Published on

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று 54 கோடியே 86 லட்சத்து 39 ஆயிரத்து 971 ஆக இருந்தது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 32 ஆயிரத்து 638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 38 லட்சத்து 51 ஆயிரத்து 990 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 50 ஆயிரத்து 765 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 8.87 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா (4.34 கோடி) மற்றும் பிரேசில் (3.20 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com