உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று: 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று: 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை
Published on

பீஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி முதல் அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட வில்லை. இந்த சுழலில் 11 வார கால ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8ம் தேதி தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் உகானில் ஒரே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உகான் நகர் முழுவதிலும் உள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உகான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இதனை 10 நாட்களில் செய்து முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com