ராணுவத்தில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் - சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு

போர்க்களத் திறனே தேசிய பாதுகாப்பு நவீனமயமாக்கலின் அளவுகோல் என்று ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜின்பிங்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்களை ராணுவத்தில் விரைவாகப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தின் 99-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, போர்க்களத் திறனே தேசிய பாதுகாப்பு நவீனமயமாக்கலின் அளவுகோல் என அவர் வலியுறுத்தினார்.

2027-ம் ஆண்டு ராணுவத்தின் 100-வது ஆண்டு விழாவிற்குள் நவீனமயமாக்கலில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா விமானங்கள், ரோபோக்கள் மற்றும் தானியங்கி கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. வுகானில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

ராணுவ தொழில்நுட்பத் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இந்த ராணுவ மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com