"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்" - உரையாற்றும் போது எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர்

மொழி பெயர்ப்பாளர் தனது உரையை சரியாக மொழி பெயர்க்காததால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எரிச்சலடைந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கீவ்,

மொழி பெயர்ப்பாளர் தனது உரையை சரியாக மொழி பெயர்க்காததால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எரிச்சல் அடைந்து தானே தனது உரையை மொழி பெயர்த்தார்.

நம் நாட்டிலும் கூட அரைகுறை மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக் கொண்டு நம் அரசியல்வாதிகள் படாத பாடு படுவர். அதேபோன்ற சம்பவம் தான் உக்ரைனில் நடந்துள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரை சந்தித்து போர் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஜெலென்ஸ்கியின் உரையை அவரது மொழிபெயர்ப்பாளர் முழுமையாக மொழிபெயர்க்காத நிலையில், கோபம் அடைந்த ஜெலென்ஸ்கி, உக்ரைனிய மொழியில் தான் பேசிய உரையை ஆங்கிலத்தில் தானே மொழி பெயர்த்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com