

கடந்த 15 வருடங்களாக திரையுலகில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போது, பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது, பயங் கரமான திகில் படம். திருஞானம் டைரக்டு செய்கிறார்.
படப்பிடிப்பு, 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு பங்களாவில் நடைபெற்றது. ரத்தத்தை உறைய வைக்கும் திகில் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பல நூறு வருடங்களுக்கு முன்பு அவுரங்கசீப் ஆண்டு வந்த கோட்டையிலும் படப் பிடிப்பு நடந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்றது.
நந்தா, ரிச்சர்டு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.