நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தேதிகள் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தேதிகள் அறிவிப்பு
x

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன்4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடக்கும் தினத்திலும், அதற்கு முந்தயை தினத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story